
விருந்தோம்பல் உனக்காக படைப்பேனே தேவி
விருந்தாக கவிநூறு படிப்பேனே கூவி
தவறாமல் வருவாயோ கலைவாணி தாயே
தவக்கோலம் அணிவேனே வரவேண்டும் நீயே
மலரெல்லாம் உன்வாசம் அறிவேனே நானும்
மனமெல்லாம் உன்நேசம் அறிவாயோ நீயும்
உடலெல்லாம் பூரிக்கும் உனையென்னும் போது
உயிரெல்லாம் கூத்தாடும் உனைப்பாடும் போது
ஒருவார்த்தை சொன்னாலே உயிர்வாழ்வேன் நானே
உன்பேரைச் சொன்னாலே உளமுருகும் தானே
கண்ணோடு வாழ்ந்தவளே கனவேடு வாராய்
என்னோடு கலந்தவளே நினைவேடு நில்லாய்
அழகான பொற்சிலயே சிரித்தாயே பூவாய்
அரங்கேறும் என்கவியோ பொலிவான நூலாய்
அணைப்பாயோ என்னைநீ பாசமிகு தாயாய்
இருப்பேனே என்றென்றும் நேசமிகு சேயாய்
- காகிதன்
No comments:
Post a Comment