Pages

Friday, October 26, 2007

விழித்திடு..! எழுந்திடு..!

சத்திய வார்த்தைகள் சொல்லிட வா
நித்தமும் பூமியை வென்றிட வா
சத்தமாய் உண்மைகள் உரைத்திட வா
மொத்தமும் உன்னிடம் உணர்ந்திடு வா

பாதைகள் பலவிதம் அறிந்திடு நீ
சாதனை செய்திட பழகிடு நீ
மேதைகள் சொற்படி நடந்திடு நீ
மாதவம் புரிந்திடு ஜெயித்திட நீ

தோல்வியில் துவழ்வது வீர மில்லை
வேள்வியில் நடந்திடு பேத மில்லை
ஆழ்கடல் கண்டிடு மனதுக் குள்ளே
வாழ்வதும் வீழ்வதும் புதிது இல்லை

கோசங்கள் பரப்பிடும் மனிதருக் கிடையே
நேசங்கள் பரப்பிடு நெஞ்சிக்குள் தனியே
வேசங்கள் நிரம்பிய பூமிக்கு நடுவே
பாசங்கள் நிரப்பிடு மனிதரி னிடையே

பாவிகள் நிறைந்தது பூமி யறை
சாவிகள் கண்டுநீ மூடி மறை
சாவினை வென்றிடு முடிந்த வரை
காவியம் சொல்லிடும் உன் பெயரை

- காகிதன்