வருடத்திற்கு ஒருமுறை தீபாவளி
இவன் வீட்டிலோ இன்றுதான் தீபஒளி
புத்தம்புதிதாய் புத்தாடை இவனுக்கு
அடுத்த தீபாவளிவரை வேறாடையே திவனுக்கு
காய்ந்த விழிகளோடு அன்றலர்ந்த மலர்களாய்
துள்ளிவரும் பிள்ளைகளின் வெள்ளை சிரிப்பு
பலகாரம் பார்த்து பலமாதங்களாகிய விழிகள்
பழிச்சிடும் இந்நாள் இறுதிவரை மட்டும்
பக்கத்துவீட்டு வெடிச்சத்தம் இவர்கள் மகிழ்ச்சி
வெடிக்காத வெடிகளை பொறுக்க மனம்தேடும்
அன்றுமட்டும் அப்பா அடிக்கவேமாட்டார் ஏன்தெரியுமா
தினந்தோறும் அவர்கள் முதுகில் தீபாவளிவெடித்தவர்
அடுத்தவீட்டு அக்காதரும் பலகாரம் ருசியோருசி
அடுத்தவரிடத்தில் கையேந்தலை மறுக்கும் அப்பா
அன்றுமட்டும் எதுவும் சொல்வதில்லை பிள்ளைகளுக்காக
சந்தோஷம் மனதில் நிலைகொள்ளுமா நாளும்?
தீபாவளி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய இளையமகள்
அடுத்தெப்பப்பா தீபாவளி வரும்னு கேப்பா
இருப்பவன் வீட்டிலோ நாள்தோறும் தீபாவளி
இல்லாத நமக்கு இன்றுமட்டுந்தானம்மா
தீபாவளி பொழுதுவிடிந்தும் புத்தாடை களையாத பிள்ளைகள்
அழுதுபுலம்பும் அப்பாவின் கண்ணீர்
என்றுவரும் அடுத்த தீபாவளி
பிள்ளைகளை புத்தம்புதிதாய்ப் பார்க்க...
- காகிதன்
Saturday, November 24, 2007
Monday, November 19, 2007
அப்ப அப்ப தீப்பிழம்பாய்..!
அப்ப அப்ப தீப்பிழம்பாய்
கொழுந்துவிட்டு எரியுதடா
கொஞ்சநேரம் அணையட்டுமே
கொழந்தபுள்ள சிரிக்கட்டுமே
எத்தனையோ நாட்டுக்குள்ள
எரிமலைகள் வெடிக்குதடா
ஏதுமில்லா ஊருக்குள்ள
குடுச மட்டும் எரியதடா
சோறு தண்ணி இல்ல இங்க
வயித்துபசி மட்டும் இங்க
ஆறு கொளம் நெறஞ்சா கூட
அர வயித்து கஞ்சிதான் இங்க
வானம் கூட சில நேரம்
வருத்தப்பட்டு அழுதாலும்
வயிறு எரிச்ச அடங்கலயே
வயித்துபசி தீரலயே
பத்தவைக்க அடுப்புமில்ல
பொங்கிதிங்க அரிசியில்ல
செத்துபோன ஒடம்பு மட்டும்
குடுசயோடு எரியுதடா
சுடுகாடு போனாகூட
எரிக்க காசு கேக்குறான்னு
ஏதுமில்லா ஏழ இங்க
எரியுராண்டா குடுசயோட...
- காகிதன்
கொழுந்துவிட்டு எரியுதடா
கொஞ்சநேரம் அணையட்டுமே
கொழந்தபுள்ள சிரிக்கட்டுமே
எத்தனையோ நாட்டுக்குள்ள
எரிமலைகள் வெடிக்குதடா
ஏதுமில்லா ஊருக்குள்ள
குடுச மட்டும் எரியதடா
சோறு தண்ணி இல்ல இங்க
வயித்துபசி மட்டும் இங்க
ஆறு கொளம் நெறஞ்சா கூட
அர வயித்து கஞ்சிதான் இங்க
வானம் கூட சில நேரம்
வருத்தப்பட்டு அழுதாலும்
வயிறு எரிச்ச அடங்கலயே
வயித்துபசி தீரலயே
பத்தவைக்க அடுப்புமில்ல
பொங்கிதிங்க அரிசியில்ல
செத்துபோன ஒடம்பு மட்டும்
குடுசயோடு எரியுதடா
சுடுகாடு போனாகூட
எரிக்க காசு கேக்குறான்னு
ஏதுமில்லா ஏழ இங்க
எரியுராண்டா குடுசயோட...
- காகிதன்
பதில் சொல்லுங்கள்..!
எனக்கு பழக்கமான
என் சாலையோரத்து
மரங்களே...
அவள் உன்னை கடக்கையில்
என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?
அங்கே பூத்துக்குலுங்கும்
அழகிய மரமொன்று நடந்து செல்கிறதென்றா?
எனக்கு பழக்கமான
என் காலைநேர
சூரியனே...
அவள் உன்னைப் பார்க்கையில்
ஏன் உன் கண்களை மூடினாய்?
உன்னைவிட பிரகாசமான
அவன் கண்களை பார்த்ததாலா?
எனக்கு பழக்கமான
என் மாலைநேர
குயில்களே...
அவள் குரல்கேட்டு
ஏன் பாடுவதை நிறுத்திவிட்டீர்கள்?
அவள் குரலின் இனிமை கண்டு
மயங்கி போனதாலா?
எனக்கு பழக்கமான
என் இரவுநேர
சந்திரனே...
அவள் முகம் பார்த்து
ஏன் மேகத்திற்குள் ஒழிகிறாய்?
அவள் முகம் பார்த்து
பூமிக்கு ஒருநிலா
போதும் என்று எண்ணியதாலா?
எனக்கு பழக்கமான
என் தோட்டத்து
ரோஜாக்களே...
ஏன் செடியிலிருந்து
கீழே குதித்து தற்கொலை செய்கிறீர்கள்?
அவள் கூந்தலேறி
அமரந்துசெல்ல தகுதி இழந்ததாலா?
- காகிதன்
என் சாலையோரத்து
மரங்களே...
அவள் உன்னை கடக்கையில்
என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?
அங்கே பூத்துக்குலுங்கும்
அழகிய மரமொன்று நடந்து செல்கிறதென்றா?
எனக்கு பழக்கமான
என் காலைநேர
சூரியனே...
அவள் உன்னைப் பார்க்கையில்
ஏன் உன் கண்களை மூடினாய்?
உன்னைவிட பிரகாசமான
அவன் கண்களை பார்த்ததாலா?
எனக்கு பழக்கமான
என் மாலைநேர
குயில்களே...
அவள் குரல்கேட்டு
ஏன் பாடுவதை நிறுத்திவிட்டீர்கள்?
அவள் குரலின் இனிமை கண்டு
மயங்கி போனதாலா?
எனக்கு பழக்கமான
என் இரவுநேர
சந்திரனே...
அவள் முகம் பார்த்து
ஏன் மேகத்திற்குள் ஒழிகிறாய்?
அவள் முகம் பார்த்து
பூமிக்கு ஒருநிலா
போதும் என்று எண்ணியதாலா?
எனக்கு பழக்கமான
என் தோட்டத்து
ரோஜாக்களே...
ஏன் செடியிலிருந்து
கீழே குதித்து தற்கொலை செய்கிறீர்கள்?
அவள் கூந்தலேறி
அமரந்துசெல்ல தகுதி இழந்ததாலா?
- காகிதன்
மழை..!
உலர்ந்த பூமியை
முத்தமிட்டு நனைக்கவந்த
ஒற்றைத்துளி நீயோ!
மேகக்காதலன்
பூமிக்காதலியைப் பார்த்து
வடித்த வா(ய்)நீரோ!
ஏழைவயல் நனைத்துப்
போகும் உயிர் காக்கவந்த
இறைகமண்டல நீரோ!
விளைநிலமல்லாது
களைநிலம்கூட வளர பகிர்ந்தளிக்கும்
சமநிலை இறை(ரை)யோ!
பள்ளி கல்லூரிகளுக்கு
இடைக்கால விடுமுறை அளிக்கவந்த
சட்ட வல்லுனரோ!
காலம் மறந்துவிட்டகடமைமுறைகளை
பருவம்தவறாமல்பெய்து
நினைவூட்டவந்த
உத்தம புருஷரோ!
நீலக்கடலுறுஞ்சி
கருமை நிறம் மாறி
பச்சைநிலம் செழிக்க
வெள்ளை நீர்கொடுக்கும்
வண்ண மாயனோ
மழையோ
நீயோ..!
-காகிதன்
முத்தமிட்டு நனைக்கவந்த
ஒற்றைத்துளி நீயோ!
மேகக்காதலன்
பூமிக்காதலியைப் பார்த்து
வடித்த வா(ய்)நீரோ!
ஏழைவயல் நனைத்துப்
போகும் உயிர் காக்கவந்த
இறைகமண்டல நீரோ!
விளைநிலமல்லாது
களைநிலம்கூட வளர பகிர்ந்தளிக்கும்
சமநிலை இறை(ரை)யோ!
பள்ளி கல்லூரிகளுக்கு
இடைக்கால விடுமுறை அளிக்கவந்த
சட்ட வல்லுனரோ!
காலம் மறந்துவிட்டகடமைமுறைகளை
பருவம்தவறாமல்பெய்து
நினைவூட்டவந்த
உத்தம புருஷரோ!
நீலக்கடலுறுஞ்சி
கருமை நிறம் மாறி
பச்சைநிலம் செழிக்க
வெள்ளை நீர்கொடுக்கும்
வண்ண மாயனோ
மழையோ
நீயோ..!
-காகிதன்
Subscribe to:
Posts (Atom)