Pages

Thursday, January 10, 2008

ஆறாம் அறிவைப் பெற்றுவிட்டாயோ..!


அமைதியான உன் பார்வையின் அர்த்தம் என்ன?
யாருக்காக காத்திருக்கிறாய் மணிக்கணக்கில்
காதலிக்காக மணிக்கணக்காய் காத்திருக்கும்
மனிதனாய் எப்போது மாறினாய்?

மனிதர்கள் மறந்த பொறுமையும் ஒழுக்கமும்
கற்பிக்க நினைத்திங்கு வந்தாயோ?
மதவெறி இனவெறி கொண்டோரை இங்கு
விழுங்கிடத் தான் நீயும் வந்தாயோ?

நிழலிலும் வெயிலிலும் சரிபாதி அமர்ந்தது
நிஜத்தையும் பொய்ப்பையும் உணர்த்திடத்தானோ
அழகையும் அழுக்கையும் சரிபாதி கொண்டது
அழுக்கிலும் அழகுண்டென்று உணர்திடத்தானோ?

வானரக் கூட்டத்தில் தவறியே பிறந்தநீ
வானறம் கற்றுத்தான் தெளிந்தாயோ?
வீணரும் வினையரும் கலந்த இம்மானுடத்தை
விரட்டியடிக்கவும் துணிந்தாயோ?

உனக்கான அரம்புகள் அனைத்தையும் மறந்து
வேதாந்தி போலே உட்கார நினைத்தே
உலகத்தின் மறையை உணத்திடும் நீயும்
ஆறாம் அறிவை பெற்றுவட்டாயோ!?



- காகிதன்