Pages

Tuesday, September 7, 2010

கண்கள்













அழகிய பார்வையால் அறிமுகம் செய்தாய் 
அவனியின் அழகினை அறிந்திடச் செய்தாய் 
ஆதவன் ஒளியினை உணர்ந்திடச் செய்தாய் 
ஔவையின் மொழியை படித்திடச் செய்தாய் 

 கருணையால் அன்பினை வழங்கிடச் செய்தாய் 
கவலையில் என்னைக் கலங்கிடச் செய்தாய் 
காண்பவர் உள்ளத்தை விளங்கிடச் செய்தாய் 
கௌரவ தோற்றத்தில் வாழ்ந்திடச் செய்தாய் 

 நவரசம் முகத்திலே படர்ந்திடச் செய்தாய் 
நயத்துடன் பாங்கினில் தொடர்ந்திடச் செய்தாய் 
நாளொரு மேனியாய் ஜொலித்திடச் செய்தாய் 
நௌகரி நேரத்தில் உழைத்திடச் செய்தாய் 

 பயத்தினை போக்கிநீ விளித்திடச் செய்தாய் 
பறவைகள் பறப்பதை களித்திடச் செய்தாய் 
பார்வையால் காதலை பகிர்ந்திடச் செய்தாய் 
பௌர்ணமி ஒளியில் மகிழ்ந்திடச் செய்தாய் 

 மலர்களின் சிரிப்பிலே வீழ்ந்திடச் செய்தாய் 
மழலையின் சிரிப்பில் ஆழ்ந்திடச் செய்தாய் 
மார்கழிப் பனியினை ரசித்திடச் செய்தாய் 
மௌனத்தின் மொழியை புரிந்திடச் செய்தாய் 

 ரகசிய மொழிகளை உறைத்திடச் செய்தாய் 
ரம்மிய முகத்தினை ஒளிர்ந்திடச் செய்தாய் 
ராத்திரி நேரத்தில் உறங்கிடச் செய்தாய் 
ரௌத்திரம் இல்லாமல் தெளிந்திடச் செய்தாய்

No comments: