Pages

Sunday, September 5, 2010

வாழ்க்கைப் பூந்தோட்டம்

வாழ்க்கைப் பூந்தோட்டம்..!

உனக்குள் உறங்கும் உலகம் கண்டிடு
உனையே அறியும் வித்தை கொண்டிடு
இணக்கம் கொண்டே வாழ்ந்திடப் பழகிடு
பிணக்கம் இல்லாத வாழ்க்கை உன்னது

கடலும் மலையும் காட்டிடும் அதிசயம்
மழையும் வெயிலும் செய்திடும் அற்பணம்
உடலும் உயிரும் புரிந்திடும் சாகசம்
உணர்ந்தால் உனக்கே வாழ்க்கை விளங்கிடும்

தனிமையில் உன்னிடம் உண்மைகள் பேசிடும்
மனிதரின் வாழ்க்கையின் சூட்சமம் சொல்லிடும்
இனியொரு சபதம் செய்திடக் கேட்டிடும்
மனிதா உன்னிடம் வாழ்க்கையை விளக்கிடும்

பிறப்புக்கும் இறப்புக்கும இடைப்பட்ட நிலையதை
இறப்புக்கு முன்னரே தெளிந்திட்டால் நிம்மதி
மனிதனின் மறுபக்கம் மாயமலர்த் தோட்டம்
உணர்ந்துநீ தெளிந்திட்டால் வாழ்க்கையே பூந்தோட்டம்

- காகிதன்

No comments: