இது கனவா
இது நினைவா
இது இரண்டா
பதில் சொல்லு இறைவா..!
வழியோரம் நான் நடக்க
வழிசொல்லும் ஒரு கிள்ளை
பழி பாவம் அறியாத
பாங்கான ஒரு முல்லை..!
இது உறவா
இது பகையா
இது இரண்டா
பதில் சொல்லு இறைவா..!
பதமாகா மனதோடு இதமாக பேசியவள்
புதிராகத் தோன்றுகிறாள்..!
பயமான மனதோடு
படபடக்கும் என்னிதம்..
இது வரமா
இது சாபமா
இது இரண்டா
பதில் சொல்லு இறைவா..!
அலைபாயும் மனதோடு
விளையாடும் சிறு மாது..!
நிலைகுலைந்த என்மனது
உணர்ந்திடுமா மெய்நிலையை...
இத நிழலா
இது நிஜமா
இது இரண்டா
பதில் சொல்லு இறைவா..!
மஞ்சம் வந்துவிட்டாள்
மகரந்தம் பகிர்ந்துவிட்டாள்
மாய உலகிற்கே
எனையழைத்துச் சென்றுவிட்டாள்..!
இது முடிவா
இது தொடரா
இது இரண்டா
பதில் சொல்லு இறைவா..!
என்னுடனே இருப்பாளோ
எனதுயிரில் கலப்பாளோ
என்மூச்சில் நிறைவாளோ
எனதருமை தமிழ் தோ(மொ)ழி..!
- காகிதன்
இது நினைவா
இது இரண்டா
பதில் சொல்லு இறைவா..!
வழியோரம் நான் நடக்க
வழிசொல்லும் ஒரு கிள்ளை
பழி பாவம் அறியாத
பாங்கான ஒரு முல்லை..!
இது உறவா
இது பகையா
இது இரண்டா
பதில் சொல்லு இறைவா..!
பதமாகா மனதோடு இதமாக பேசியவள்
புதிராகத் தோன்றுகிறாள்..!
பயமான மனதோடு
படபடக்கும் என்னிதம்..
இது வரமா
இது சாபமா
இது இரண்டா
பதில் சொல்லு இறைவா..!
அலைபாயும் மனதோடு
விளையாடும் சிறு மாது..!
நிலைகுலைந்த என்மனது
உணர்ந்திடுமா மெய்நிலையை...
இத நிழலா
இது நிஜமா
இது இரண்டா
பதில் சொல்லு இறைவா..!
மஞ்சம் வந்துவிட்டாள்
மகரந்தம் பகிர்ந்துவிட்டாள்
மாய உலகிற்கே
எனையழைத்துச் சென்றுவிட்டாள்..!
இது முடிவா
இது தொடரா
இது இரண்டா
பதில் சொல்லு இறைவா..!
என்னுடனே இருப்பாளோ
எனதுயிரில் கலப்பாளோ
என்மூச்சில் நிறைவாளோ
எனதருமை தமிழ் தோ(மொ)ழி..!
- காகிதன்
No comments:
Post a Comment