Pages

Saturday, April 28, 2012

காதல் வலி..!

தெரிந்திடுமா காதல் வலி
அறிந்திடுமே காதல் விழி
இது கனவா புது உறவா
காதல் ஒரு பல்லாங்குழி
பள்ளம் மேடு தாண்டித்தானே
காதல் வரும் முன்னாலே

மேகம்கூட உன்தன் முகத்தை காட்டிப் போகுதே
தேகம்கூட உன்தன் வரவை விரும்பி கேட்குதே
சுவாசம் முழுதும் கன்னி உன்தன் நினைவு நிரம்புதே
வாசம் வீசும் பூக்கள் உன்தன் பேரைச் சொல்லுதே
மொழிபேசும் உன்வாசம் விழியோரம் உன் நேசம்
புதுசா இருக்கே இந்த அனுபவம்

குருவிக்கூட்டம் இங்கே பறக்கும் மனசுபோல திரியும்
அருவிசாரல்கூட அவ சிரிப்பைப்போல இருக்கும்
தெருவோரம் நடந்தாலே பூப்பூக்கும் மண்மேலே
கடிகாரம் பார்த்தாலே உன் ஓட்டம் தெரியும்
பறந்துவருவியா தன்ன மறந்து வருவியா
இதுதானா காதல் உணரும் வலி

- காகிதன்

(2007ம் ஆண்டு தமிழ்மன்றத்தில் கஜினி என்ற பெயரில் ஒரு சினிமா பாடல் தொனியில் எழுதியது)

2 comments:

சிவஹரி said...

இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,

தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் அறிய : http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_1097.html

காகிதன் said...

மிக்க நன்றி சிவஹரியாரே..