Pages

Saturday, November 24, 2007

ஏழையின் தீபாவளி

வருடத்திற்கு ஒருமுறை தீபாவளி
இவன் வீட்டிலோ இன்றுதான் தீபஒளி
புத்தம்புதிதாய் புத்தாடை இவனுக்கு
அடுத்த தீபாவளிவரை வேறாடையே திவனுக்கு

காய்ந்த விழிகளோடு அன்றலர்ந்த மலர்களாய்
துள்ளிவரும் பிள்ளைகளின் வெள்ளை சிரிப்பு
பலகாரம் பார்த்து பலமாதங்களாகிய விழிகள்
பழிச்சிடும் இந்நாள் இறுதிவரை மட்டும்

பக்கத்துவீட்டு வெடிச்சத்தம் இவர்கள் மகிழ்ச்சி
வெடிக்காத வெடிகளை பொறுக்க மனம்தேடும்
அன்றுமட்டும் அப்பா அடிக்கவேமாட்டார் ஏன்தெரியுமா
தினந்தோறும் அவர்கள் முதுகில் தீபாவளிவெடித்தவர்

அடுத்தவீட்டு அக்காதரும் பலகாரம் ருசியோருசி
அடுத்தவரிடத்தில் கையேந்தலை மறுக்கும் அப்பா
அன்றுமட்டும் எதுவும் சொல்வதில்லை பிள்ளைகளுக்காக
சந்தோஷம் மனதில் நிலைகொள்ளுமா நாளும்?

தீபாவளி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய இளையமகள்
அடுத்தெப்பப்பா தீபாவளி வரும்னு கேப்பா
இருப்பவன் வீட்டிலோ நாள்தோறும் தீபாவளி
இல்லாத நமக்கு இன்றுமட்டுந்தானம்மா

தீபாவளி பொழுதுவிடிந்தும் புத்தாடை களையாத பிள்ளைகள்
அழுதுபுலம்பும் அப்பாவின் கண்ணீர்
என்றுவரும் அடுத்த தீபாவளி
பிள்ளைகளை புத்தம்புதிதாய்ப் பார்க்க...

- காகிதன்

No comments: