Pages

Monday, November 19, 2007

பதில் சொல்லுங்கள்..!

எனக்கு பழக்கமான
என் சாலையோரத்து
மரங்களே...

அவள் உன்னை கடக்கையில்
என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?

அங்கே பூத்துக்குலுங்கும்
அழகிய மரமொன்று நடந்து செல்கிறதென்றா?

எனக்கு பழக்கமான
என் காலைநேர
சூரியனே...

அவள் உன்னைப் பார்க்கையில்
ஏன் உன் கண்களை மூடினாய்?

உன்னைவிட பிரகாசமான
அவன் கண்களை பார்த்ததாலா?

எனக்கு பழக்கமான
என் மாலைநேர
குயில்களே...

அவள் குரல்கேட்டு
ஏன் பாடுவதை நிறுத்திவிட்டீர்கள்?

அவள் குரலின் இனிமை கண்டு
மயங்கி போனதாலா?

எனக்கு பழக்கமான
என் இரவுநேர
சந்திரனே...

அவள் முகம் பார்த்து
ஏன் மேகத்திற்குள் ஒழிகிறாய்?

அவள் முகம் பார்த்து
பூமிக்கு ஒருநிலா
போதும் என்று எண்ணியதாலா?

எனக்கு பழக்கமான
என் தோட்டத்து
ரோஜாக்களே...

ஏன் செடியிலிருந்து
கீழே குதித்து தற்கொலை செய்கிறீர்கள்?

அவள் கூந்தலேறி
அமரந்துசெல்ல தகுதி இழந்ததாலா?

- காகிதன்

No comments: