Pages

Monday, November 19, 2007

மழை..!

உலர்ந்த பூமியை
முத்தமிட்டு நனைக்கவந்த
ஒற்றைத்துளி நீயோ!

மேகக்காதலன்
பூமிக்காதலியைப் பார்த்து
வடித்த வா(ய்)நீரோ!

ஏழைவயல் நனைத்துப்
போகும் உயிர் காக்கவந்த
இறைகமண்டல நீரோ!

விளைநிலமல்லாது
களைநிலம்கூட வளர பகிர்ந்தளிக்கும்
சமநிலை இறை(ரை)யோ!

பள்ளி கல்லூரிகளுக்கு
இடைக்கால விடுமுறை அளிக்கவந்த
சட்ட வல்லுனரோ!

காலம் மறந்துவிட்டகடமைமுறைகளை
பருவம்தவறாமல்பெய்து
நினைவூட்டவந்த
உத்தம புருஷரோ!

நீலக்கடலுறுஞ்சி
கருமை நிறம் மாறி
பச்சைநிலம் செழிக்க
வெள்ளை நீர்கொடுக்கும்
வண்ண மாயனோ
மழையோ
நீயோ..!

-காகிதன்

No comments: