Pages

Saturday, January 5, 2008

கலைவாணியே...3

















திருத்தொண்டன் நான்புரியும் திருபூஜை தன்னை
மனங்கொண்டு ஏற்றிடுவாய் கவிகாக்கும் அன்னை
வீருகொண்டு கவியேற்றும் சிறுபிள்ளை என்னை
கூறுகண்டு போற்றிடுவாய் கலைமகளே என்னை

ஒளியெல்லாம் உன்போல ஒளிராது என்றும்
ஒலியெல்லாம் உனைபோல ஒலிக்காது இன்றும்
மொழியெல்லாம் உன்போல இனிக்காது என்றும்
கலைச்செல்வி உன்புகழோ அழியாது என்றும்

முத்தமிழை உலகிற்கு அளித்தாயே அம்மா
இரத்தமெல்லாம் தேன்தமிழை நிறைத்தாயே அம்மா
புத்தியிலே உன்நினைவை வளர்த்தேனே அம்மா
பித்தனெனை வித்தகனாய் உணர்ந்தேனே அம்மா

பூமியிலே பிறந்தயென்னை கவியெழுத வைத்தாய்
ஊமையெனை வரத்தாலே சுரம்பாட வைத்தாய்
நாமகளே நாதன்எனை கவியாக்கி பார்த்தாய்
என்மதியை உன்மதியால் நூலாக்கித் தைத்தாய்

- காகிதன்

No comments: