Pages

Saturday, January 5, 2008

கலைவாணியே...6





















வெண்தா மரைமே லமர்ந்தே யிருப்பவள்
வெண்தே கமதை கவியா யுணர்த்தியே
வீணை யொருகையா மோலை மறுகையாம்
கண்டே னுனது ருவை

பண்பா டிடவே யுனையே நினைந்தனன்
வெண்பா வதையே யுனக்காய் புனைந்தனன்
கண்பார்த் திடவா யதையே யிரந்தனன்
கண்பார்த் திடுவாயம் மா

வாணியைநி னைத்தால் வருமே கவிதைகள்
நானதையு ணர்ந்தேன் விதியாலே வாணியை
யென்னில் நிறைத்தே தொடர்வேன் பயணத்தை
தோணியாய வள்இருப் பாள்

கேள்வி யுமாயும் பதிலது வாயுமாய்
வாழ்க்கையின் சூட்சமம் கண்டிங்கு வாழ்க்கையை
என்வச மாக்கிய தேவியுன் பாதத்தை
முன்வந்து கும்பிடு வேன்

- காகிதன்

No comments: