Pages

Thursday, November 1, 2007

சிதறல்கள்

மலந்திடும் வாசப் பூவிலும்
புலர்ந்திடும் வைகறை பொழுதிலும்
வீசிடும் தென்றல் காற்றிலும்
பேசிடும் பிஞ்சுக் குழந்தையிலும்

தூவிடும் முத்துச் சாரலிலும்
கூவிடும் குயிலின் குரலிலும்
குளிர்ந்திடும் பௌர்ணமி நிலவிலும்
ஒளிர்ந்திடும் மாலை சூரியனிலும்

படர்ந்திடும் காலை பனியிலும்
நடந்திடும் பசுமை புல்வெளியிலும்
ஆடிடும் வண்ண மயிலிலும்
ஓடிடும் பஞ்சு மேகத்திலும்

உனக்கான என் காதலின்
எண்ணச் சிதறல்களை
ஒவ்வொரு துளியாய்
ஒவ்வொன்றிலும் சிதறவிட்டிருக்கிறேன்...

-காகிதன்

No comments: