Pages

Monday, January 28, 2008

நுனிப்புல்




நுனிப்புல் – பாகம் 1
இது நாவல் அல்ல… வாழ்க்கை

இந்த நாவலின் நோக்கம் இந்த வாழ்க்கையின், உலகம் தோன்றியதின் உண்மை என்ன என்பதை ஒருவரும் அறியாதபோதிலும், அறிந்து கொண்டவர்கள் போல் வாழும் வாழ்க்கை முறையை அலசுகிறது. ஒரு கிராமத்தில் நடக்கும் விசயங்களை கற்பனை செய்து எழுதப்பட்டு இருக்கிறது.

வாசன் எனும் கதாபாத்திரம் கடவுள் எனும் சக்தியைக் குறித்து கேள்வி எழுப்புவதாயும் அதே தருணத்தில் எதிர்ப்பாளாராக இல்லாமல் அமைந்து உள்ளது. வாசனுக்கு ஏற்படும் இறைவன் பற்றிய உணர்வுகள் குறிப்பிடப்பட்டு உள்ளது முக்கியமாக சிலை எடுக்கும் விபரம், திருவிழா தருணங்கள். வினாயகம் எனும் கதாபாத்திரம் இறைவன் அவரது கனவில் கூறிய செடியினை தான் வாங்கிய நிலத்தில் பயிரிட்டு உலகம் காத்திட வேண்டும் எனவும் அதற்கு வாசனது ஒத்துழைப்பு அவசியம் என கருதி வாசனை தன்னுடன் இணைந்து இருக்க செய்கிறது.

நட்பு பற்றி சாரங்கன் – வினாயகம், வாசன் –பாரதி – கிருத்திகா, பொன்னுராஜ்-முத்துராசு என கதாபாத்திரங்களின் செயல்பாடுகள் மூலம் விளக்கப்பட்டு உள்ளது.

வாசனது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் அவனிடம் பயில வரும் குழந்தைகள் என ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கு பக்கபலமாக இருந்து சிறப்பிக்கிறது. வினாயகத்தின் தம்பி சேகரும் அவரது குழந்தைகள் பாரதி, அருண் எனும் கதாபாத்திரங்கள் கதையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பெருமாள் எனும் கதாபாத்திரம் முதியவராகச் சித்தரிக்கப்பட்டு அவரது ஸ்டெம் செல்களில் இருந்து நியுக்ளியஸ் பிரிக்கப்பட்டு குளோனிங் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அவரது இறுதி ஆசையான ஆஸ்ரமம் கட்ட வாசனது ஒத்துழைப்பினை அவர் இறக்கும் முன்னர் பெற்றுக் கொள்கிறார். மாதவி எனும் கதாபாத்திரம் நடக்கப் போகும் நிகழ்வுகளை தான் அறிந்து இருந்தாலும் அந்த நிகழ்வுகள் பற்றி அவருக்கு சுயமாகத் தெரியாது என்பது போல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நூலின் முக்கிய அம்சங்களாக நெகாதம் எனும் செடியும், குளோனிங்கும் குறிப்பிடப்பட்டு உள்ளது. பல அறிவியல் விசயங்கள் உள்ளடக்கி ஆன்மிகத்தையும் சேர்த்து சமூக குடும்ப சூழ்நிலை பற்றி எழுதப்பட்டு இருக்கிறது இந்த

நூல்.---------------------------தொடர்புக்கு:டாக்டர். வெ. இராதாகிருஷ்ணன் (ஆசிரியர்)விலை - ரூ.130 மட்டுமே

No comments: