Pages

Saturday, February 2, 2008

என் பேசும் மடந்தையின் பேசா மொழிகள்..!

காலை எழுந்ததும்
ஏன்தான் விடிந்ததோ
என்றே உரைக்கும் உன் கண்கள்..!

காலை பனியிலே
புற்களில் நடக்கையில்
தாளம் போடும் உன் பற்கள்..!

காய்கறி நறுக்கையில்
கைகளில் குலுங்கியே
கானங்கள் படிக்கும் உன் வளையல்கள்..!

சாலையில் நடக்கையில்
வாகன இரைச்சலிலும்
சாதகம் செய்யும் உன் கொலுசுகள்..!

மாலை தென்றலில்
சோலையில் நடக்கையில்
அலையாய் ஆடிடும் உன் கூந்தல்..!

பாசம் வருகையிலும்
நேசம் வருகையிலும்
கேசம் வருடும் உன் விரல்கள்..!

நேரம் கடந்து நான்
இரவில் வருகையில்
எனக்காய் துடிக்கும் உன் இதயம்..!

நான் வடிக்கும் கவிதையை
படித்து முடிக்கையில்
மெல்ல சிரித்திடும் உன் இதழ்கள்..!

உன் பேசா மொழிகளை
தினமும் ரசித்து
கவியாய் உருகும் நானோ உந்தன்???!!!

- காகிதன்

No comments: