Pages

Saturday, February 2, 2008

திருமண வி(ப)த்து

திருமண வி(ப)த்து அது ஒரு அழகிய குடும்பம், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்போடும் பாசத்தோடும் வாழ்ந்து வந்தார்கள். மோகன் தான் குடும்பத்தலைவர். தன் நான்கு மகன்களையும் மிகுந்த ஒழுக்கத்துடன் வளர்த்திருந்தார். அந்த ஊரில் வாழும் மக்கள் அனைவரும் மோகன் குடும்பத்தின்மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.
ஒரு சமயம் அனைவரும் திருப்பதிக்குச் சென்றிருந்தனர்.

திருப்பதியிலிருந்து சென்னைக்கு திரும்பும் வழியில் திடீரென அந்த விபத்து நிகழ்ந்தது. எதிரில் வந்த சுமோ மோகன் வீட்டு வண்டியின் மேல் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆச்சரியப்படும் வகையில் எதிரே வந்த வண்டியில் கூட இதே போன்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அது கோபியின் குடும்பம். திருச்சியைச் சேர்ந்த கோபிக்கு நான்கு பெணகபிள்ளைகள். வண்டிகள் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் அருகில் இருந்த பள்ளத்தில் சரிந்து விழுந்தது.

இறைவன் அருளோ அவர்கள் செய்த புண்ணியமோ எல்லோரும் உயிர்சேதம் இல்லாமல் தப்பினர். வண்டியின் பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து நேர்ந்தது. இரு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் குறை சொல்லிக்கொள்ளவில்லை, மாறாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர். வண்டிகள் இரண்டும் சேதமானது அதனால் மோகன் இரண்டு வாடகை வண்டிகளை எடுத்துக்கொண்டு கோபி குடும்பத்தினரை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மேலும் மோகன் தன்வீட்டில் இரண்டொருநாள் தங்கிவிட்டுச் செல்லும்படி கேட்டுக்கொண்டார்.

ஊரில் மோகனுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் அந்த இரண்டு நாட்களிலேயே கோபி நன்கு தெரிந்துகொண்டார். இதுபோன்ற ஒரு நல்ல குடும்பத்தில் தன் பெண்களை திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்று வெகு நாளாக ஆசைகொண்டிருந்தார். தன் மனைவியோடு கலந்துபேசி ஊருக்கு கிளம்பும்போது அதைக் கேட்டும்விட்டர். மோகனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். அடுத்த முகூர்த்த்த்தில் நான்குபேருக்கும் ஒரே மேடையில் திருமணம் இனிதே நிறைவேறியது.

- காகிதன்

No comments: