Pages

Saturday, February 2, 2008

கலப்பு ம(ர)ணம்

முருகனும் ஜான்ஸியம் ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள். இரண்டு நாட்களுக்குப்பிறகுதான் இரு வீட்டுக்கும் தெரிய வந்தது. ஒரு மதத்தவர் ஓடிவிட்டாலே பெரிய அளவில் பிரச்சினைகள் வெடிக்கும். இரு வேறு மதத்தவர் என்றால் சொல்லவா வேண்டும். கலவரம் வெடித்தது. இரு வீட்டாரும் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டனர். மேலும் இருவரது வீட்டிலிருந்து ஆளுக்கு ஒரு பக்கம் தேட ஆரம்பித்தனர். யார் கிடைத்தாலும் அவர்களை சாகடிப்பது என்று முடிவெடுத்தனர்.

வழக்கமாக அவர்கள் செல்லும் இடங்கள், தோழர்கள் தோழிகள் வீட்டில் சென்று விசாரித்தனர். ஆனால் அவர்கள் யாருக்கும் இவர்கள் இருவரும் காதலித்திருந்த விஷயம் பற்றி தெரியவில்லை. அவர்கள் புகைப்படங்களை பத்திரிக்கையில் கொடுத்து கண்டுபிடித்து தரும்படி விளம்பரம் கொடுத்தனர்.

இரண்டு மாதங்கள் உருண்டோடியது பலன் பூஜ்ஜியம். இறுதியில் ஒரு கடிதம் இரண்டு வீட்டிற்கும் ஒரே நேரத்தில் வந்தது. நாங்கள் இருவரும் காதலித்தோம் எங்கள் வாழ்க்கையை நாங்களே தீர்மானிக்கும் வயதில் தீர்மானித்துக்கொண்டோம். எங்கள் திருமணம் உங்களுக்கு தடையென்றால் நாங்கள் மூன்றாம் மதத்திற்கு மாற தயாராய் இருக்கிறோம். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். எங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இந்த கடிதத்திற்கு பத்திரிக்கை வாயிலாக பதிலளிக்காத பட்சத்தில் எங்கள் பிணங்கள் இடம்மாற்றி உங்கள் விலாசத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.

இரு குடும்பங்களும் தனித்தனியாக அவர்களை கொல்ல நினைத்தது, ஆனால் காதலர்கள் இருவரும் அவர்கள் குடும்பத்தாரின் வெறித்தனத்தை மாற்றி சம்மதிக்க வைத்தார்கள். இரு குடும்பமும் பத்திரிக்கை வாயிலாக பதிலளித்தனர். இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.

- காகிதன்

No comments: