Pages

Saturday, November 26, 2011

நிகழ்வு கவிதை..2





















ஒரு பெண்ணின் மனநிலை :
ஜாதியை காட்டி அவளை காதலனுடன் பெற்றோர் இணைய விடமாட்டார்கள்,
அவளும் அவனின்றி வேறு ஒருவரை திருமணம் செய்ய மாட்டாள்,
ஆனால் வீட்டை எதிர்த்து அவனுடன் சென்றிடவும் மாட்டாள்.
அவள் மனநிலையென்ன?
யாராவது விளக்குங்களேன்...

விடிந்தால் திருமணம்
முடிந்தால் இருபிணம்
ஒன்று என்னுடையது
மற்றொன்று என்
காதலனுடையது

நடக்காவிட்டாலும் கூட
இருபிணம் விழும்
அது என் தாய் தந்தையருடையது
எதுவேண்டும் எனக்கு?
என்ன செய்யட்டும் நான்?

தாய்தந்தையர் இல்லாமல்
காதலனுடன் மட்டும்
இன்பமான இல்வாழ்க்கை
நடத்தமுடியுமா?
என் உள்ளம் உறுத்தாதா?

திருமணம் செய்தால்மட்டும்
கணவருடன் சலனமில்லா
இல்லறத்தை தொடரமுடியுமா?
இது என் கணவருக்கு
செய்யும் துரோகமில்லையா?

மணமகனோடு பேசிப்பார்க்கலாமா?
குணமானவனாய் இருந்து
சரியென்று சொல்லிவிட்டால்
இருபிணங்கள் காக்கப்படுமே
இதோ செல்கிறேன் மணமகன் இல்லம்தேடி..!

No comments: