Pages

Saturday, November 26, 2011

நிகழ்வு கவிதை..4















50 வயது மதிக்கத்தக்க ஒருவருடன் சிறு வயதிலிருந்தே நட்பு கொண்ட மற்றொரு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், தனது நண்பர் தன்னை நிராகரித்து விட்டதாக வெகு அண்மையில் நடந்த சில விசயங்களை காரணம் காட்டி நண்பர் மீது கோபம் கொள்கிறார், விலகியும் செல்கிறார். ஆனால் இவர் கோபம் கொள்ளுமளவிற்கு குறிப்பிட்ட விசயங்கள் மிகவும் சாதாரணமானவை. (உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்). அவர் மிகவும் நல்லவர், சாந்தமானவர், இவரது நண்பன் இவ்வாறு கோபம் கொண்டு விலகிச் செல்வதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் இவரது மனநிலையை கவிதையாக்குங்கள்.


என்னுடனே இருப்பேன் என்றவனே
என்னுயிர் தோழனே
இன்னுயிரை ஈய்ந்தால் கூட
என்னுடனே என்றவனே

எத்தனையோ சோதனை வந்தும்
இணைபிரியா நண்பர்களானோம்
சின்னதொரு காரணம் கண்டு
என்னை நீயும் கோவிக்கலாமா?

சாவுகூட நம்மைப் பிரிக்க
பயந்து நடுங்கும் வேளையிலே
தாவும்மனம் சொல்லைக்கேட்டு
என்னை நீயும் வெறுக்கலாமா?

வேண்டும் உன்தன் நட்புயென்று
வேண்டாமென்றேன் கோடிபொருளை
வேண்டாமென்று சொல்வதுயேனோ
வேண்டாசில வார்த்தைகளாலே

காலம்முழுதும் காத்துக்கிடப்பேன்
திரும்பியென்னை அழைத்திடு நீயும்
காலமென்ன சொல்வது நட்பை
நாளையேநீ வந்திடுவாயே..!

No comments: