Pages

Saturday, November 26, 2011

நிகழ்வு கவிதை..3














கடவுளைப் பற்றி அதிகம் நினையாத ஒரு சாதாரண உழைப்பாளி முன் கடவுள் தோன்றுகின்றார். அந்த மனிதனின் மனநிலை பற்றிய கவிதை வரையுங்க

உன் பொழுதைப் போக்க
என்னைக் பார்க்கவந்தாயோ..!
சிறிது ஓய்வெடுத்துக்கொள்
என் வேலையை
முடித்துவிட்டு வருகிறேன்.

நான் கொண்டுவந்த பழையசோறை
பானையில வச்சிருக்கேன்
பசியோடு வந்திருப்பாய்
போய் சாப்பிட்டு
பசியாறு பின் பேசலாம்

எல்லாத்தையும் சாப்பிட்டுறாத
எனக்கு கொஞ்சம் மிச்சம் வை
தொட்டுக்க ஊறுகாதான்
தயங்காம சாப்பிடு
தண்ணிகூட பக்கத்தில் இருக்கு

உங்கிட்ட ஒரு கேள்வி
ராமர் பாலத்தை
கட்டுனது யாரு?
…..
ஐயா கடவுளே நில்லுங்க
எங்க போறீங்க சாப்பிட்டாவது போங்க...

No comments: