Pages

Monday, November 21, 2011

சோராதே..!

விழுந்த மழைத்துளிகள்
விண்ணை நோக்கியே
எழுந்து செல்கிறதே
மீண்டும் விழுந்திடத்தான்!

வாழ்க்கை அதுபோலே
வாழப் பழகிவிடு
ஏற்றம் தாழ்வென்பது
எப்போதும் நிலையென்று!

வெயிலை உணராமல்
நிழலில் நனையாதே
எதுவும் தெரியாது
சுகமும் அறியாது!

அறிந்தும் அறியாமல்
அகழியில் விழுந்தாலும்
அதிலும் நீந்திவிடு
அக்கரை சேர்ந்துவிடு!

இனியும் வருந்தாதே
இல்லை துயரொன்று
எழுந்து நடைபோடு
எல்லை வானென்று!

No comments: