Pages

Thursday, November 1, 2007

இல்லறத் திருநாள்

அழகிய காதலின் அரங்கேற்றம்
பழகிய அன்பின் வெளித்தோற்றம்
இளகிய நெஞ்சத்தின் ஒருதோற்றம்
திருமண நாளாய் உருமாற்றம்

கலியுக ராமன் கைகளிலே
இணைந்தது ஜானகி பொற்கரங்கள்
சிலையென அவளை வடித்திடவே
ஒருவரு மில்லை தரணியிலே

உறவுகள் கூடி இருக்கையிலே
அரணது கைகள் இடுப்பினிலே
விரும்பிய இதயம் தடுக்கையிலே
அரும்பிய வெட்கம் யாரரிவார்

இமயவன் புரிந்திடும் சிலுமிஷங்கள்
இருதய சுரங்கத்தின் பொக்கிஷங்கள்
இளையவள் இதயத்தின் ரகசியங்கள்
இனித்தது மணவறை சம்பவங்கள்

தனிமையின் ரகசியம் அறிந்திடவும்
இனிமையின் இன்பத்தை விளக்கிடவும்
இணைந்தினி யில்லறம் நடத்திடவும்
இனியவன் துணையாய் வந்துவிட்டான்

காந்தனின் கரத்தை பிடிக்கையிலே
பூந்தளிர் உதட்டை கடிக்கயிலே
கூந்தலி லிருக்கும் பூக்களுமே
விழுந்தது வெட்கி தரையினிலே

ஆணின ஆதவன் முகம்பார்த்து
பேணிய பெண்மையை புறம்சாய்த்து
கூரிய பார்வையால் கோமகனை
உரித்தது கோதையின் கயல்விழிகள்

கனிந்தது காதல் நன்னாளில்
அணிந்தது மோகன பொன்னாளில்
இணைந்தது இருமணம் இந்நாளில்
இனித்தது இல்லற திருநாளில்

- காகிதன்

No comments: