Pages

Thursday, November 1, 2007

மாலை சூடும் மணநாள்

ஒருமுறை நடக்கும் திருநாள்
பலமுறை இனிக்கும் ஒருநாள்
இருவரை இணைக்கும் ஒருநாள்
திருமறை சொல்லும் மணநாள்

பலரது ஆசிகள் கொண்டு
மலரது மலர்வதைக் கண்டு
உளமது மகிழ்ச்சியில் இன்று
மிளிருது வாசணைச் செண்டு

கனவிலே கண்டிட்ட காட்சிகள்
நினைவிலே நடந்திடும் நீட்சிகள்
மனதிலே ஒளிர்ந்திடும் தீபங்கள்
உணர்விலே பதிந்திடும் ரூபங்கள்

உறவுகள் வாழ்த்திடும் நேரம்
உதடுகள் விரிந்திடும் தூரம்
நன்மைகள் விளங்கிடும் நேரம்
தீமைகள் விலகிடும் தூரம்

கொண்டவள் சிரித்திடும் போது
கண்டுநீ சிரித்திடு போதும்
அண்டமும் மகிழ்ந்திடும் வண்ணம்
கொண்டிடு வாழ்க்கையில் திண்ணம்

உன்னிடம் உள்ளதை கொடுத்தால்
தன்னிடம் உள்ளதை தருவாள்
சொன்னதை மனதில் வைத்தால்
எண்ணிய வாழ்க்கை கிடைக்கும்

- காகிதன்

No comments: