Pages

Thursday, November 1, 2007

திருமணம் ஆனால்..

புதுவெள்ளம் நெஞ்சுக்குள் தினம்துள்ளும்
பொழுதெல்லாம் மனசுக்குள் கதைசொல்லும்
இரவெல்லாம் இதயத்தில் குடிகொள்ளும்
பகலெல்லாம் இரவாக மாற்றச்சொல்லும்

புதுராகம் மனசுக்குள் தினம்கேட்கும்
புதுப்பூக்கள் நெஞ்சத்தில் தினம்பூக்கும்
கதிரவனை கண்டாலே வெறுப்பாகும்
பதிவிரதை துணையிருந்தால் சுகமாகும்

மனைவியது விருப்பத்தை அறியச்சொல்லும்
மனம்திறந்து அவளிடத்தில் பேசச்சொல்லும்
மகிழ்ச்சியிலே மற்றதெல்லாம் மறக்கச்சொல்லும்
மனமுவந்து இன்பத்தை அளிக்கச்சொல்லும்

துக்கத்தை தொலைதூரம் அழைத்துச்செல்லும்
தூக்கத்தை பலநேரம் இழக்கச்சொல்லும்
வெக்கத்தை அடியோடு மறக்கச்சொல்லும்
பக்கத்தில் அவளோடு இருக்கச்சொல்லும்

- காகிதன்

No comments: