Pages

Thursday, November 1, 2007

காதல் ராகம்

கண்கள் இரண்டும் பார்க்கும் நேரமிது
காதல் பிறக்கிறது
கைகள் இரண்டும் கோர்க்கும் நேரமிது
கல்யாணம் நடக்கிறது.

பூவும் காற்றும் சேரும் நேரமிது
மோகம் பிறக்கிறது
தோளில் நீயும் சாயும் நேரமிது
தேகம் இனிக்கிறது.

வானும் மண்ணும் சேரும் நேரமிது
வான்மழை பொழிகிறது.
நீயும் நானும் சேரும் நேரமிது
இதயம் இனிக்கிறது.

காற்றில் ராகம் சேரும் நேரமிது
சங்கீதம் பிறக்கிறது
உன்னில் என்னை சேர்க்கும் நேரமிது
ஊடல் பிறக்கிறது.

- காகிதன்

No comments: