Pages

Saturday, September 4, 2010

கலைவாணியே..7





















கனவோ யெதுவோ அறியே னெனையே
தனியா யிருந்தும் துணையா யுனையே
நினைந்தே நிதமும் தொழுவே னுனையே
உணர்வா யதையும்நீ யே 

கருவா யுனது னினைவை விதைத்தே
பெறுவே தினமு முனது வரத்தை
தருவா யதனால் தொடந்தேன் தவத்தை
குருவா யிருப்பா யெனக்கு

சுழலும் புவியே உளரும் கவியே
களங்க மிலாத சுரத்தி னொலியே
உளமு முருகி குளிரும் கவியே
தெளிவா யெழுதும் கதை

பசித்தே யெழுந்தேன் கலத்தை யெடுத்தேன்
புசித்தே னுனது வரத்தால் கசித்தேன்
கவியை சுரமாய் வடித்தேன் அறிவாய்
அவையம் தருவா யெனக்கு

No comments: