Pages

Saturday, September 4, 2010

வாழ்க்கை..!

கதை சொல்லவா...
கதை சொல்லவா
வாழ்க்கை கதை சொல்லவா

கலையல்லவா
கலையல்லவா
வாழ்க்கை கலையல்லவா

வாழ்க்கை ஒரு பறவை
சிறகு முளைத்துவிட்டால்
பறந்துவிடும்
வாழ்க்கை ஒரு பறவை

வாழ்க்கை ஒரு பயணம்
இலக்கு வந்துவிட்டால்
முடிந்துவிடும்
வாழ்க்கை ஒரு பயணம்

வாழ்க்கை ஒரு ஊஞ்சல்
ஆட்டம் அடங்கிவிட்டால்
நின்றுவிடும்
வாழ்க்கை ஒரு ஊஞ்சல்

வாழ்க்கை ஒரு புத்தகம்
படித்து முடித்துவிட்டால்
விளங்கிவிடும்
வாழ்க்கை ஒரு புத்தகம்

வாழ்க்கை ஒரு கவிதை
அர்த்தம் விளங்கிவிட்டால்
சலித்துவிடம்
வாழ்க்கை ஒரு கவிதை

வாழ்க்கை ஒரு கப்பல்
கவனம் இழந்துவிட்டால்
மூழ்கிவிடும்
வாழ்க்கை ஒரு கப்பல்

வாழ்க்கை ஒரு விடியல்
இருளை கடந்துவிட்டால்
விடிந்துவிடும்
வாழ்க்கை ஒரு விடியல்

- காகிதன்

No comments: