Pages

Saturday, September 4, 2010

பார்த்தேன்... ரசித்தேன்…

நீ உறங்கும்போது உன் இமையின் அழகை ரசிப்பேன்
உனை உறங்கசொல்லி உன் இதழின் சுழிவை ரசிப்பேன்
உன் முகத்தில் சரியும் உன் கூந்தல் அசைவை ரசிப்பேன்
உன் இதழில் புரியும் உன் வெட்க புன்னகையை ரசிப்பேன்

நீ தீண்டும்போது உன் விரலின் நளினம் ரசிப்பேன்
நீ வேண்டும்போது நீ ஏங்கும் விதத்தை ரசிப்பேன்
நீ நிற்கும்போது உன் புடவை மடிப்பை ரசிப்பேன்
நீ நடக்கும்போது உன் கொலுசின் ஜதியை ரசிப்பேன்

நீ ஆடும்போது உன் இடையின் வளைவை ரசிப்பேன்
நீ சிரிக்கும்போது உன் சிரிப்பின் ஒலியை ரசிப்பேன்
நீ பேசும்போது உன் வார்த்தை ஜாலம் ரசிப்பேன்
நீ நாணும்போது உன் மோகம் அதனை ரசிப்பேன்

நீ தும்மும்போது உன் மூக்கின் அழகை ரசிப்பேன்
நீர் பருகும்போது உன் தொண்டை குழியை ரசிப்பேன்
உணவருந்தும்போது உன் உச்சந்தலையை ரசிப்பேன்
உன் தூக்கக்கனவில் நீ உளரும்என் பெயரை ரசிப்பேன்

- காகிதன்

No comments: