Pages

Saturday, September 4, 2010

உன்னைத் தழுவ...

இரண்டு கைகள் இருந்தும்
அது எப்போதும்
பணித்திருக்கவில்லை.

தலையை கோதும்போதும்
எனது கைகள்
பணித்திருக்கவில்லை.

உணவருந்தும்போதும்
எனது கைகள்
பணித்திருக்கவில்லை

நான் குளிக்கும்போதும்
எனது கைகள்
பணித்திருக்கவில்லை

எனக்கான வேலைசெய்யவும்
எனது கைகள்
பணித்திருக்கவில்லை.

உன்னைத் தழுவ மட்டுமே
பணித்திருக்கிறேன் என் கரங்களை
நீ என் அருகில் இருக்கையிலே....

- காகிதன்

No comments: