Pages

Saturday, September 4, 2010

பசி..!

ஏழைக்கு இது
இலவச இணைப்பு
எப்போதும் இதற்கு மட்டு்ம்
இவனிடத்தில்
பஞ்சமே இருக்காது..!


சாகும்வரை கூடவரும்
அழையா நண்பன்
பாவம் செய்யத் தூண்டும்
கண்மறை
கட்டும் துணி..!

பணக்காரன் உணராத
மனித உணர்ச்சி
படுத்தாலும் அடித்தெழுப்பும்
நேரம்தவறா
அழைப்பு மணி..!

கண்ணுறங்கா காவலாளி
கடமைதவறாக்
கண்ணியவான்
இதுயின்றி இயங்காது
உலகம்..!

இல்லாதவனிடம்
நிறைந்து கிடக்கும்
இருப்பவனிடம்
இல்லாமல் போகும்
அட்சயப் பாத்திரம்..!

No comments: