Pages

Saturday, September 4, 2010

வாழ பழகிடு..!

வாழ்க்கை என்னடா வாழ்க்கை
அதை வெல்ல கொள்ளுநீ வேட்கை
நெஞ்சில் ஏனடா செருக்கு
அதை தூக்கிப் போட்டுநீ நொறுக்கு..!

பாவம் செய்வது தவறடா
கோபம் கொள்வது வீணடா
பாவம் பார்ப்பவன் நீயடா
பாரை வெல்லடா மானிடா..!

தூரம் தானடா இலக்கு
அதை நொடியில் கடந்துநீ விலக்கு
நம்பிக்கை தானடா விளக்கு
அதை மனிதர் உணர்ந்திட விளக்கு..!

வேதம் சொல்லிடும் பாடம்
அதை நாளும் கற்றிடு போதும்
வேசம் போடுவது பாவம்
அதை இன்றே நிறுத்திடு போதும்..!

உண்மை தானடா சத்தியம்
அதை உணர்ந்து இருந்திடு பத்தியம்
நேர்மை தானடா லட்சியம்
அதை கண்டு வென்றிடு நிச்சயம்..!

கொல்லத் துணிந்திடு சோகத்தை
வெல்லத் துணிந்திடு மோகத்தை
சொல்லத் துணிந்திடு உண்மையை
வாழப் பழகிடு மேன்மையாய்..!

No comments: