Pages

Saturday, September 4, 2010

கலைவாணியே..8





















பூவித மேவிய மேனியைக் கொண்டனள்
கூவிய செவ்விதழ் புன்னகை தேவியின்
பூமுகம் நெஞ்சினில் வந்திட நாளுமே
என்தவம் செய்தனை யே

ஜோதியி லாடிடும் பூமகள் தேன்முகம்
வீதியில் போகையில் தோன்றுமென் பாதையில்
ஆயிர வாரணங் கொண்டவுன் பூசைக்கு
பாயிரம் பாடிடு வேன்

பல்லவி யில்லாத பாசுரம் பாடியே
எல்லைக ளில்லாத வுன்புகழ் நல்கியே
தொல்லைக ளில்லாத வாழ்வினைத் தந்தவுன்
தில்லைகள் பாடிடு வேன்

செந்தமிழ் நாவினில் வந்திடும் வேளையில்
சிந்தனை செய்திடு மென்மன மந்தியில்
சந்திர சூரிய காலங்கள் பாராமல்
வந்திடுயென் நெஞ்சினிற் குள்

No comments: